பருப்பு வகைகள் இறக்குமதி 16 லட்சம் டன்னாக குறைந்ததுபருப்பு வகைகள் இறக்குமதி 16 லட்சம் டன்னாக குறைந்தது ... ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பாததால்அன்னிய நேரடி முதலீடு 104 கோடி டாலராக சரிவு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பாததால்அன்னிய ... ...
பரஸ்பர நிதி முதலீடுகளால் கிடைக்கும் நன்மைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2011
23:58

- திருமை.பா.ஸ்ரீதரன் - பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளால், முதலீட்டாளருக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, பங்கு சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்யும் போது, சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.குறிப்பாக, பங்குகளின் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், முதலீட்டாளர்களைப் பாதிக்கின்றன. மேற்கண்ட இடையூறுகளால் பங்குகளில் முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் பலருக்கு, பரஸ்பர நிதி சிறந்த உறுதுணையாகும்.ஒரு முதலீட்டாளரால், பங்கு சந்தை வாயிலாக, ஒரு சில நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்து, பங்குகளை வாங்க அல்லது விற்க முடியும். மேலும், அந்த முதலீட்டாளர், அவர் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனம் பற்றிய விவரங்களை, ஓரளவிற்கேனும் தெரிந்து கொண்டு, முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிடில், அவருக்கு இழப்பு ஏற்படும். ஆனால், பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யும் போது, முதலீட்டாளர்கள் எவ்வித கவலையும் அடையத் தேவையில்லை. ஏனெனில், பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள், அதன் வல்லுனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சிறந்த நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்கின்றன. மேலும், அந்த நிறுவனங்களிடம் பல முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகை அதிகளவில் இருப்பதால், பலதரப்பட்ட நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்ய முடிகிறது. இதுபோன்று, பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதால், தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக, ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தாலும், மற்ற நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்வால், நஷ்டம் சரிசெய்யப்பட்டு, லாபமே ஏற்பட வாய்ப்புள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய தொகையை, அவற்றின் தகவல் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டிய பின், முதலீட்டாளர் செய்துள்ள முதலீட்டிற்கு ஏற்ப, அவர்களுக்கு எத்தனை யூனிட்கள் உள்ளன என்பது குறித்த விவரத்தை, அனுப்பி வைக்கும். அவ்வாறு பங்கீடு செய்த தினத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும், அந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் குறிப்பிட்டுள்ள வருடங்கள் வரை (5, 6 மற்றும் 7 ஆண்டுகள் என்று), அவர்கள் செய்துள்ள முதலீட்டிற்கு ஏற்ப, ஆண்டு வருவாயை (டிவிடெண்டு) பகிர்ந்து அளிக்கும்.பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டும் போது, வளர்ச்சி திட்டத்தின் கீழ் முதலீடு செய்திருந்தால், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் யூனிட்டுகள் கிடைக்கும்.ஒரு தனி நபரின் ஆண்டு வருவாய் அதிகம் இருந்து, வரிவிலக்கு பெறக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் அவர் முதலீடு செய்தால், மத்திய அரசு, அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வரையில் வரிவிலக்கும் அளிக்கிறது.எல்லாவற்றையும் விட, பரஸ்பர நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள், அவற்றின் ஒவ்வொரு நிதி திட்டத்தையும் பங்கு சந்தைகளில் பட்டியலிட்டு (மற்ற நிறுவனங்களின் பங்குகளை போல்) கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களுக்கு இடையில் பணத்தேவை ஏற்பட்டால், அவர்கள் அந்த யூனிட்டுகளை விற்று விட முடியும். அந்த பரஸ்பர நிதிதிட்டத்தின் (லாப, நஷ்டங்களுக்கு ஏற்ப) நிதி இருப்புக்கு ஏற்ப, அந்த யூனிட்டுகளின் மதிப்பு (Nஞுt அண்ண்ஞுt ஙச்டூதஞு) உயரும் அல்லது குறையும்.ஒரு பரஸ்பர நிதி நிறுவனம், (இந்தியாவின் அறக்கட்டளை சட்டத்தின் படி) பொறுப்பான நபர்களைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த நிறுவனம், அதன் சட்ட திட்டங்களுக்கு ஏற்பட செயல்பட ஆரம்பிக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)