பதிவு செய்த நாள்
10 மார்2011
00:00
புதுடில்லி: நாட்டின், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக, மத்தியஅரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், நம் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சென்ற பிப்ரவரி மாதத்தில், வெளிநாடுகளிலிருந்து 6 லட்சத்து 92 ஆயிரம் பயணிகள், நம் நாட்டிற்கு வருகைபுரிந்துள்ளனர். இது, 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 15 சதவீதம் (6 லட்சம் பேர்) அதிகமாகும்.சென்ற ஜனவரி மாதத்தில், வருகை தந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட 10 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.2011ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், 12 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டினர், நம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது, சென்ற 2010ம் ஆண்டின் இதே மாதங்களை விட 12.7 சதவீதம் (10 லட்சத்து 92 ஆயிரம் சுற்றுலா பயணிகள்) அதிகமாகும். இது, 2009ம் ஆண்டு இதே மாதங்களை விட 12.4 சதவீதம் அதிகமாகும்.சென்ற பிப்ரவரி மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் மூலம் 7,653 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி வருவாய் கிடைத்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே மாதத்தில் 6,646 கோடி ரூபாயாக இருந்தது. 2009ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்த வருவாய், 4,576 கோடி ரூபாயாக இருந்தது.2011ம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஜனவரி மாதங்களில், சுற்றுலா துறை வாயிலாக 13 ஆயிரத்து 430 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டின் இதே மாதத்தை விட 9.7 சதவீதம் (12,239 கோடி ரூபாய்) அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|