ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பாததால்அன்னிய நேரடி முதலீடு 104 கோடி டாலராக சரிவுஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பாததால்அன்னிய ... ... கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி 20 சதவீதம் வளர்ச்சி கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி 20 சதவீதம் வளர்ச்சி ...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2011
00:00

புதுடில்லி: நாட்டின், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக, மத்தியஅரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், நம் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சென்ற பிப்ரவரி மாதத்தில், வெளிநாடுகளிலிருந்து 6 லட்சத்து 92 ஆயிரம் பயணிகள், நம் நாட்டிற்கு வருகைபுரிந்துள்ளனர். இது, 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 15 சதவீதம் (6 லட்சம் பேர்) அதிகமாகும்.சென்ற ஜனவரி மாதத்தில், வருகை தந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட 10 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.2011ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், 12 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டினர், நம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது, சென்ற 2010ம் ஆண்டின் இதே மாதங்களை விட 12.7 சதவீதம் (10 லட்சத்து 92 ஆயிரம் சுற்றுலா பயணிகள்) அதிகமாகும். இது, 2009ம் ஆண்டு இதே மாதங்களை விட 12.4 சதவீதம் அதிகமாகும்.சென்ற பிப்ரவரி மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் மூலம் 7,653 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி வருவாய் கிடைத்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே மாதத்தில் 6,646 கோடி ரூபாயாக இருந்தது. 2009ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்த வருவாய், 4,576 கோடி ரூபாயாக இருந்தது.2011ம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஜனவரி மாதங்களில், சுற்றுலா துறை வாயிலாக 13 ஆயிரத்து 430 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டின் இதே மாதத்தை விட 9.7 சதவீதம் (12,239 கோடி ரூபாய்) அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)