பதிவு செய்த நாள்
10 மார்2011
13:02
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கார்களின் விற்பனை அதிகரித்து கொண்ட வருகிறது. சிறிய கார்கள் மட்டுமின்றி, மிக அதிக விலை கொண்ட கார்களும் அதிகளவில் விற்பனையாகின்றன. அதே நேரத்தில், கார்களின் விலையும் அவ்வப்போது உயர்ந்து கொண்ட வருகிறது. கடந்த ஆண்டு நான்கு முறை கார்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் கார்களின் விலையில், 2 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. கார் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில், மீண்டும் ஒரு முறை கார்களின் விலை உயர உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக, இந்த மாத இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இந்த விலை உயர்வுக்கும், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வே காரணமாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வை, மாருதி சுசூகி நிறுவனத்தின் முக்கிய அதிகாரி மைத்ரா உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது காரின் விலையில், 2 முதல் 3 சதவீதம் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மாருதி ஸ்விஃப்ட், ஹுண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் போன்ற நடுத்தர கார்களின் விலையில் ரூ.10,000 வரை உயரலாம். ஹோண்டா அக்கார்டு, டொயோட்டா காம்ரே, ஸ்கோடா சூப்பர்ப் போன்ற சொகுசு கார்களின் விலையில் ரூ.25 ஆயிரம் வரை உயரலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|