பதிவு செய்த நாள்
10 மார்2011
13:40
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி), தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பிரிவுகளில், பிக்சட் டெபாசி்ட்டிகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1 வருடம் முதல் 499 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் மற்றும் 501 நாட்களிலிருந்து 2 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 8.50 சதவீத வட்டிவிகிதம், 9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 9 சதவீத வட்டி விகிதம், 15 லட்சத்திற்கும் குறைவான மற்றும் 15 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரையிலான டெர்ம் டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் எனவும், இந்த புதிய வட்டி விகிதம், இந்த மாதம் 7ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|