பதிவு செய்த நாள்
10 மார்2011
16:03
மும்பை : வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று, சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம் சரிவுடனேயே முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 141.97 புள்ளிகள் குறைந்து 18327.98 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 36.60 புள்ளிகள் குறைந்து 5494.40 என்ற அளவிலும் பங்குவர்த்தகம் முடிவடைந்தது. டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, என்டிபிசி மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன பங்குகளின் மதிப்பு 1 முதல் 2 சதவீதமும், டாடா ஸ்டீல் மற்றும் டாடா பவர் நிறுவன பங்குகளின் மதிப்பு 2 முதல் 6 சதவீதமும், ஓஎன்ஜிசி, ஐடிசி மற்றும் இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 0.4 சதவீதமும் சரிந்திருந்தன. முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்திருந்த போதிலும், செயில, ஹூரோ ஹோண்டா, டிஎல்எப், பெல், சன் பார்மா, பவர் கிரிட், அம்புஜா சிமெண்ட்ஸ், ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரெக்சர், மாருதி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதம் ஏற்றம் பெற்றிருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|