பதிவு செய்த நாள்
11 மார்2011
00:17
புதுடில்லி: நடப்பு 2010 -11ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், நாட்டின் ரப்பர் ஏற்றுமதி 11 ஆயிரத்து 678 டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட 13 சதவீதம் குறைவு என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.கடந்த 2009 -10ம் நிதியாண்டின், ரப்பர் ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 47 சதவீதம் சரிவடைந்து அதாவது, 46 ஆயிரத்து 926 டன்னிலிருந்து, 25 ஆயிரத்து 90 டன்னாக குறைந்துள்ளது. இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி 450 கோடி ரூபாயிலிருந்து 251 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில், ரப்பர் ஏற்றுமதி 31.5 சதவீதம் குறைந்துள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பார்லிமென்டில் தெரிவித்தார். கடந்த 2009 -10ம் நிதியாண்டில், ரப்பர் ஏற்றுமதி மதிப்பின் அடிப்டையில், 6,370.66 கோடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் (2008 - 09) 7,039.94 கோடி ரூபாய் மதிப்பிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|