நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் ரப்பர்  ஏற்றுமதி 13 சதவீதம் சரிவுநடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் ரப்பர் ஏற்றுமதி 13 சதவீதம் சரிவு ... ஆம்கோ பேட்டரிஸ் ஜெயஸ்ரீ வெங்கட்ராமன் தலைவராக பொறுப்பேற்பு ஆம்கோ பேட்டரிஸ் ஜெயஸ்ரீ வெங்கட்ராமன் தலைவராக பொறுப்பேற்பு ...
ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் நாட்டின் நேரடி வரி வசூல் 21 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2011
00:18

புதுடில்லி: நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருந்து வருகிறது. இதை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நாட்டின் நேரடி வரி வசூல் 3 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், வசூலான தொகையை விட 20.86 சதவீதம் அதிகம்.இது, வரும் 2011-12ம் நிதியாண்டிற்கு மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ள, நேரடி வரி வசூல் இலக்கான, 4 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயில் 75.34 சதவீதம்.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நிறுவன வரி வசூல் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட 24.44 சதவீதம் (1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகம். இதே 11 மாத காலத்தில், தனிநபர் வருமான வரி வசூல் 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட 14.29 சதவீதம் (98 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகம்.இதே காலத்தில், பங்கு பரிவர்த்தனை வரி வசூல் 6,078 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட 1.72 சதவீதம் (5,975 கோடி ரூபாய்) அதிகம்.சென்ற பிப்ரவரியில் மட்டும், நிறுவன வரி வசூல் 6,740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில் வசூலான தொகையை விட 3.4 சதவீதம் (6,519 கோடி ரூபாய்) அதிகம். சென்ற பிப்ரவரில், தனிநபர் வருமான வரி வசூல் 11 ஆயிரத்து 923 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில் வசூலான தொகையை விட 46.63 சதவீதம் (8,131 கோடி ரூபாய்) அதிகம். நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் நேரடி வரி வசூல் வாயிலாக, முதலில் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்து. தற்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீத அளவிற்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால், நேரடி வரி வசூல் இலக்கு மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தி, 4 லட்சத்து 46 ஆயிரம் கோடி திரட்டும் வகையில் மறு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)