பதிவு செய்த நாள்
11 மார்2011
00:18
சென்னை: ஆம்கோ பேட்டரிஸ் நிறுவனத்தின் தலைவராக ஜெயஸ்ரீ வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஆம்கோ நிறுவனம், ரயில் விளக்குகளுக்கான பேட்டரிகள், தொலைபேசி மற்றும் தொலைபேசி செல்கள், மின் நிறுவனங்களுக்கு தேவையான ஸ்டேஷ்னரி பேட்டரி மற்றும் ராணுவத் துறைக்கான பேட்டரிகள் தயாரிப்பில் ஈடுபடுகிறது.அமல்கமேஷன் குழுமத்தின் தலைவர் ஏ.சிவசைலம் காலமானதை அடுத்து அவருடைய மகளான ஜெயஸ்ரீ வெங்கட்ராமன் இந்நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், 1993ம் ஆண்டிலிருந்து, இந்நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டில் ஆம்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யாக பொறுப்பேற்றார். நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை கவனித்து வந்த இவர், 2006ம் ஆண்டில் நிறுவனத்தின் இயக்குரானார்.டாபே மற்றும் டாபே ஆக்சஸ் ஆகிய நிறுவனங் களிலும் இயக்குனராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|