சாதனை படைக்குது வெள்ளி வர்த்தகம் இரண்டு மாதத்தில் ரூ.8,000 அதிகரிப்புசாதனை படைக்குது வெள்ளி வர்த்தகம் இரண்டு மாதத்தில் ரூ.8,000 அதிகரிப்பு ... பரஸ்பர நிதியங்களின் 'யூனிட்டுகள்', நெறிமுறைகள் பரஸ்பர நிதியங்களின் 'யூனிட்டுகள்', நெறிமுறைகள் ...
வங்கிகளில் உரிமை கோரப்படாத நிலையில் ரூ.1,700 கோடி இருப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2011
00:23

புதுடில்லி: நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலுமாக, உரிமை கோரப்படாமல், 1,700 கோடி ரூபாய் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ராஜ்ய சபாவுக்கு தெரிவித்துள்ள அறிக்கையில், கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலுமாக, செயல்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 1.03 கோடியாக உள்ளது. இவை அனைத்திலுமாக உரிமை கோரப்படாத நிலையில், 1,723.24 கோடி ரூபாய் உள்ளது.மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் இதற்கு புதியதொரு திட்டத்தை கொண்டு வர உள்ளது. இத்திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேல், செயல்படுத்தப்படாத வங்கி கணக்குகளில் உள்ள தொகையை 'வாடிக்கையாளர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியம்' என்ற கணக்கில் வரவு வைத்து, வங்கி வாடிக்கையாளர்களின் நல திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.ஆனால் இதற்கு, வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949ல் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். ரிசர்வ் வங்கி, இத்தொகையை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அவ்வப்போது தெரிவிக்கும். அதன்படிதான் வங்கிகள் இத்தொகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)