பதிவு செய்த நாள்
11 மார்2011
00:23
புதுடில்லி: நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலுமாக, உரிமை கோரப்படாமல், 1,700 கோடி ரூபாய் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ராஜ்ய சபாவுக்கு தெரிவித்துள்ள அறிக்கையில், கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலுமாக, செயல்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 1.03 கோடியாக உள்ளது. இவை அனைத்திலுமாக உரிமை கோரப்படாத நிலையில், 1,723.24 கோடி ரூபாய் உள்ளது.மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் இதற்கு புதியதொரு திட்டத்தை கொண்டு வர உள்ளது. இத்திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேல், செயல்படுத்தப்படாத வங்கி கணக்குகளில் உள்ள தொகையை 'வாடிக்கையாளர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியம்' என்ற கணக்கில் வரவு வைத்து, வங்கி வாடிக்கையாளர்களின் நல திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.ஆனால் இதற்கு, வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949ல் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். ரிசர்வ் வங்கி, இத்தொகையை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அவ்வப்போது தெரிவிக்கும். அதன்படிதான் வங்கிகள் இத்தொகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|