பதிவு செய்த நாள்
11 மார்2011
11:34
புதுடில்லி : இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, ரூ. 13,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது, இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 2007ம் ஆண்டில் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, 2006-07ம் ஆண்டில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 447.93 கோடியும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 240.29 கோடி அளவிற்கும் இழப்பு ஏற்பட்டது. பின் இவ்விரு நிறுவனங்களுள் இணைந்தன. இந்த இணைப்பிற்குப் பின், 2007-08ம் ஆண்டில், இழப்பு ரூ. 2,226.16 கோடியாக அதிகரித்தது. 2009-10ம் நிதியாண்டின் இறுதியில், ஏர் இந்தியா நிறுவனத்துடனான ஒட்டுமொத்த இழப்பு ரூ. 13,326.86 கோடியாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|