பதிவு செய்த நாள்
11 மார்2011
13:42
துபாய் : சர்வதேச அளவில், விமான சேவை வழங்கி வரும் முன்னணி நிறவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், சேவையை விரிவுபடுத்தும் பொருட்டு, ஜூலை மாதம் முதல், கோல்கட்டாவிற்கு தினசரி விமான சேவையை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, கத்தார் ஏர்வேஸ் நிறுவன உயர் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜூலை 27ம் தேதி முதல், இந்த சேவை துவக்கப்பட உள்ளதாகவும், இந்த சேவையை தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், இந்தியாவின் 12 நகரங்களில் , வாரத்திற்கு 95 விமான சேவைகளை நிர்வகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டுள்ள தங்கள் நிறுவன சேவை, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலும் சேவையை விரிவுபடுத்த இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|