பதிவு செய்த நாள்
11 மார்2011
14:04
புதுடில்லி : இந்த 2011ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி 7.04 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 3.29 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, ஏற்றுமதி இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. நிலக்கடலை, எள், ஆமணக்கு, சோயாபீன், கடுகு உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடைத் தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. புண்ணாக்கு உற்பத்தியில் நம் நாடு முன்னிலை வகித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதியான 7.04 லட்சம் டன் புண்ணாக்கில் சோயா புண்ணாக்கின் அளவு மட்டும் 5.40 லட்சம் டன்னாகும். அடுத்து, கடுகு புண்ணாக்கு 1.48 லட்சம் டன்னும், ஆமணக்கு புண்ணாக்கு 13,110 டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடலைப் புண்ணாக்கு ஏற்றுமதி 1,475 டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|