பதிவு செய்த நாள்
11 மார்2011
15:35
மும்பை : இந்தியாவின் முன்னணி நகைக் கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்ளும் வகையில் மூலதனச் சந்தையில் களம் இறங்குகிறது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இம்மாத இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்தூட் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் செபி அமைப்பு அனுமதி அளித்தது. 5.15 கோடி பங்குகளை இந்நிறுவனம் வெளியிட உள்ளது. இதன் வாயிலாக சுமார் ரூ.1,400 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. முற்றிலும் சூபுக் பில்டிங்' எனப்படும் ஏல அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ள இப்பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் வெளியீட்டு விலை விரைவில் அறிவிக்கப்படும். கேரளாவைச் சேர்ந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் வங்கி சாராத நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம் டெபாசிட்டுகளை திரட்டுவதில்லை. தனிநபர்கள் அடகு வைக்கும் தங்க ஆபரணங்கள் மீது கடன் வழங்கும் நடவடிக்கையில் பிரதானமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|