பதிவு செய்த நாள்
14 மார்2011
11:20
புதுடில்லி : மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் புதிய வரவான ஸ்டாலியோ பைக் உற்பத்தி, கடந்த 3 மாதங்களில் 81 சதவீதம் சரிவடைந்திருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில், மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், 139 பைக்குகளை விற்பனை செய்திருந்ததாகவும், ஆனால் 2011ம் ஆண்டு துவக்கமே, இந்த நிறுவனத்திற்கு பேரிடியாக அமைந்து விட்டது. இந்த ஆண்டின் முதல் 3 மாத கால அளவில், வெறும் 46 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த பைக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னையே, இந்த விற்பனை மற்றும் உற்பத்தி சரிவிற்கு காரணம் என அச்சங்கம் தெரிவித்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில், 81 சதவீதம் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|