பணவீக்கம் அதிகரிப்புபணவீக்கம் அதிகரிப்பு ... ரூ.99க்கு பிராட்பேண்ட் டிவி சேவை : அசத்தும் ஏர்டெல் ரூ.99க்கு பிராட்பேண்ட் டிவி சேவை : அசத்தும் ஏர்டெல் ...
சேவையை விரிவுபடுத்துகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2011
12:28

புதுடில்லி : இந்தியாவின் பொதுத் துறையைச் ‌சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அடுத்த பத்து ஆண்டுகளில் 110 புதிய கப்பல்களை வாங்கும் என மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். இதற்கான செலவினம் ரூ.27,668 கோடியாக இருக்கும். நடப்பு பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012) 62 புதிய கப்பல்களை வாங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 36 கப்பல்களுக்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து கப்பல்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டன. மற்ற கப்பல்களுக்கான கட்டுமான பணிகள் இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு தளங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிறுவனம் அடுத்த நிதி ஆண்டில் மட்டும் 26 கப்பல்களுக்கு ஆர்டர்கள் வழங்க உள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் தற்போது 78 கப்பல்களை கொண்டுள்ளது. இவையனைத்துமாக 56.10 லட்சம் டன் சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவையாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்நிறுவனம் கையாண்ட சரக்குகளின் அளவு 2.30 கோடி டன்னாகும். இந்தியாவில், சரக்குக் கப்பல் போக்குவரத்து மற்றும் அத்துறை சார்ந்த நடவடிக்கைகளில் சுமார் 200 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றுள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் அடங்கும். நாட்டின் சரக்கு கப்பல் போக்குவரத்து துறையில் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஜி.இ. ஷிப்பிங், எஸ்ஸார் ஷிப்பிங் போர்ட்ஸ், வருண் ஷிப்பிங், சன்மார் ஷிப்பிங், திரிவேணி ஷிப்பிங் சர்வீசஸ் ஆகியவை முன்னிலை வகித்து வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)