பதிவு செய்த நாள்
14 மார்2011
13:45
புதுடில்லி : நவநாகரீக மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முனணனியில் உள்ள பாண்டலூன்ஸ், தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விலையை 18 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பியூச்சர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிஷோர் பியானி கூறியதாவது, மத்திய அரசு, சமீபத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், ஆயத்த ஆடைகளுக்கான தீர்வை வரியை 10 சதவீதம் வரை உயர்த்தியது. இதன் காரணமாக, நிறுவன தயாரிப்புகளின் விலையை 18 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆயத்த ஆடைகளுக்கான தீர்வை வரி உயர்வின் மூலம், உற்பத்திப் பொருட்களான விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன்காரணமாகவே, விலையை உயர்த்தும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேநிலையில், வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு, தற்போதுள்ள பாண்டலூன் ரீடெயில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|