பதிவு செய்த நாள்
14 மார்2011
16:34
காக்கிநாடா (ஆந்திரா) : இந்தியாவில் முதல் சோயாபீன் புராசசிங் பிளாண்டை துவக்கிய நிறுவனமும், முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமுமான ருசி குழுமம், 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில், சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ருசி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விரிவாக்கத்தின் முதற்கட்டமாக, கம்போடியாவில் பனைமரத்திலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக, அங்கு 20,000 ஹெக்டேர் பரப்பளவில், பனை மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஒப்பந்தம், இருநாடுகளிடையே கையெழுத்தாகியுள்ளது. இன்னும், 3 ஆண்டுகளில், நிறுவனம், சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கம்போடியாவை அடுத்து எத்தியோப்பியாவில், 25,000 ஹெக்டேர் பரப்பளவிலான இடத்தில் சோயாபீன் பயிர்களை வளர்த்து, அதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்க உள்ளதாகவும், இதன்மூலம் ,இந்தியாவில் மட்டுமே, தாங்கள் செய்து வந்த எண்ணெய் வர்த்தகத்தை, சர்வதேச மக்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|