பதிவு செய்த நாள்
16 மார்2011
01:31
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்க் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அணு உலைகள் வெடிப்பால், கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியால், உலகின் பல்வேறு நாடுகளில், பங்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளா னது. குறிப்பாக, இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் மிகவும் மோசமடைந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற, பங்கு வியாபாரத்தில், பொறியியல், மோட்டார் வாகனம், மின்சாரம், ரியல் எஸ்டேட், உலோகம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்திருந்தது. அதே சமயம், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவைப்பாடு இருந்தது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், அதிகளவு முன்கூட்டிய வரியை செலுத்தியுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் செயல்பாடு, நடப்பு நிதியாண்டின், நான்காவது காலாண்டில் நன்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால், இதன் பங்கின் விலை அதிகரித்திருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 271.84 புள்ளிகள் சரிவடைந்து 18,167.64 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,326.33 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,920.55 புள்ளிகள் வரை யிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், உடன்பிறப்புகளின் நிறுவனங்க ளான, முகேஷின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனிலின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தவிர, ஏனைய 28 நிறுவன பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 81.85 புள்ளிகள் குறைந்து 5,449.65 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,497.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,373.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|