பதிவு செய்த நாள்
16 மார்2011
09:03
பொங்கலூர் : பொங்கலூர் பகுதியில், பெரும்பாலான விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த முதலீட்டில் ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கக்கூடியது வெண்டை. மூன்று மாத பயிரான வெண்டை, விதை நடவு செய்த 45 நாட்களில் காய்ப்புக்கு வந்து விடும். செடி காயும் வரை காய் விளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். வெண்டையை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யும் விவசாயிகள் மிகவும் குறைவு. மற்ற காய்கறி பயிர்களுடன் கலந்து, கால் ஏக்கர், அரை ஏக்கர் என குறைந்தளவு நிலங்களில் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். தற்போது, அலகுமலை, பெரியாரியபட்டி, கிருஷ்ணாபுரம், ராமம்பாளையம், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெண்டைக் காய்களை பறிக்கும்போது, ஏற்படும் அரிப்பு காரணமாக, கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இதுவே, விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைக்க காரணம்.கடந்த நான்கு மாதமாக, கிலோ 20 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், விவசாயிகள் வெண்டை சாகுபடி பரப்பை அதிகரித்தனர். மற்ற காய்கறிகள் விலை குறைந்ததாலும், வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்ததாலும் தற்போது கிலோ ஆறு ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'வெண்டை பயிரிட ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும். நன்றாக பராமரித்தால், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். எச்சூழ்நிலையிலும் மற்ற பயிர்களை போல நஷ்டத்தை தராது. தற்போது, விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், வருமானம் பாதியாக குறைந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|