இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஇந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ... தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.128 குறைவு தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.128 குறைவு ...
பூ விளைச்சல் அதிகரிப்பு மல்லிகை விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2011
11:01

ஈரோடு: நடப்பாண்டு பூ விளைச்சல் இருமடங்கு அதிகரித்துள்ளதால், வரத்து அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால், 'சென்ட்' ஆலைக்கு அதிகளவு ஏற்றுமதி செய்கின்றனர். சத்தி வட்டரத்தில் சுமார் 1,800 ஹெக்டேர் பரப்பளவில் மலர் சாகுபடி நடக்கிறது. இப்பகுதியில் இருந்து தினமும் 1,500 கிலோ மல்லிகைப் பூ விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், சத்தி, ஓசூர் பகுதியில் நடப்பாண்டு ரோஜா, மல்லி, சம்பங்கி, அரளி மற்றும் கேந்திப்றபூ விளைச்சல் இருமடங்கு அதிகரித்துள்ளது. இருமாதங்களாக முகூர்த்த சீஸன், பண்டிகை திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து வந்ததால், பூக்கள் தேவை அதிகமாக இருந்தது. பூக்கள் வரத்தும் குறைவாக இருந்ததால், விலை ஏறுமுகமாகவே இருந்தது. இம்மாதம் துவக்கத்தில் இருந்தே பூ வரத்து அதிகரித்துள்ளது. பண்டிகை, முகூர்த்த சீஸன் இல்லாததால், விலையும் படிப்படியாக குறைகிறது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காததால், மார்க்கெட்டுக்கு பூ வரத்து குறைந்து, வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். பூ மண்டி உரிமையாளர் மகேஷ் கூறியதாவது: தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, ஓசூர், சத்தி பகுதியில் தற்போது அனைத்து வகை பூக்கள் அறுவடை நடக்கிறது. சென்றாண்டை விட பூ விளைச்சல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்து நிலையில், பண்டிகை சீஸன் இல்லாததால் பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல், 'சென்ட்' ஆலைக்கு விற்பனை செய்கின்றனர். நேற்று ஒரு கிலோ 'சூரியா ஆப்பிள்' மற்றும் 'பட்டாம்பூச்சி' ரக ரோஜாப் பூ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மல்லிகை 80 ரூபாய், அரளி 40 ரூபாய், செவ்வந்தி 60 ரூபாய், கோழிக்கொண்டை 50 ரூபாய், சம்பங்கி 60 ரூபாய்க்கு விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)