பதிவு செய்த நாள்
16 மார்2011
11:01
ஈரோடு: நடப்பாண்டு பூ விளைச்சல் இருமடங்கு அதிகரித்துள்ளதால், வரத்து அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால், 'சென்ட்' ஆலைக்கு அதிகளவு ஏற்றுமதி செய்கின்றனர். சத்தி வட்டரத்தில் சுமார் 1,800 ஹெக்டேர் பரப்பளவில் மலர் சாகுபடி நடக்கிறது. இப்பகுதியில் இருந்து தினமும் 1,500 கிலோ மல்லிகைப் பூ விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், சத்தி, ஓசூர் பகுதியில் நடப்பாண்டு ரோஜா, மல்லி, சம்பங்கி, அரளி மற்றும் கேந்திப்றபூ விளைச்சல் இருமடங்கு அதிகரித்துள்ளது. இருமாதங்களாக முகூர்த்த சீஸன், பண்டிகை திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து வந்ததால், பூக்கள் தேவை அதிகமாக இருந்தது. பூக்கள் வரத்தும் குறைவாக இருந்ததால், விலை ஏறுமுகமாகவே இருந்தது. இம்மாதம் துவக்கத்தில் இருந்தே பூ வரத்து அதிகரித்துள்ளது. பண்டிகை, முகூர்த்த சீஸன் இல்லாததால், விலையும் படிப்படியாக குறைகிறது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காததால், மார்க்கெட்டுக்கு பூ வரத்து குறைந்து, வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். பூ மண்டி உரிமையாளர் மகேஷ் கூறியதாவது: தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, ஓசூர், சத்தி பகுதியில் தற்போது அனைத்து வகை பூக்கள் அறுவடை நடக்கிறது. சென்றாண்டை விட பூ விளைச்சல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்து நிலையில், பண்டிகை சீஸன் இல்லாததால் பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல், 'சென்ட்' ஆலைக்கு விற்பனை செய்கின்றனர். நேற்று ஒரு கிலோ 'சூரியா ஆப்பிள்' மற்றும் 'பட்டாம்பூச்சி' ரக ரோஜாப் பூ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மல்லிகை 80 ரூபாய், அரளி 40 ரூபாய், செவ்வந்தி 60 ரூபாய், கோழிக்கொண்டை 50 ரூபாய், சம்பங்கி 60 ரூபாய்க்கு விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|