பதிவு செய்த நாள்
17 மார்2011
14:00
மும்பை : பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் களமிறங்கும் பொருட்டு, பாலிசி விகிதங்கள் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து, பொருளாதார வல்லுனர்கள் கூறியிருப்பதாவது, தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால், உள்ளூர் சந்தையில் அதிகரி்ததுள்ள உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இதன் காரணமாக, இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பணவீக்கத்தை சமாளிக்கும் பொருட்டு, குறுகிய கால பாலிசிகளுக்கான லெண்டிங் மற்றும் பாரோயிங் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. மார்ச் 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை, இந்த பாலிசி விகிதங்கள் 8 முறை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த வார உணவுப் பணவீக்கவிகிதம் 9.42 சதவீதமாக பதிவாகி உள்ளது. இது, கடந்த வாரத்தில் 9.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|