பதிவு செய்த நாள்
18 மார்2011
00:22
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மீண்டும் சுணக்கம் கண்டது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து காணப்பட்டது.இந்நிலையில், நாட்டின் பண வீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, ரிசர்வ் வங்கி, வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது. இதுவும், பங்கு வர்த்தகத்தில் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் குறைந்திருந்தது.காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, வங்கிகளின் பங்கு விலை உயர்ந்திருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, மதியத்திற்கு பிறகு இத்துறை நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 208.82 புள்ளிகள் சரிவடைந்து, 18,149.87 புள்ளிகளில் நிறைவடைந்தது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,354.27 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,104.02 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 64.50 புள்ளிகள் குறைந்து, 5,446.65 புள்ளிகள் நிலை கொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|