பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிப்புபணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை முக்கிய கடன்களுக்கான ... ... மீண்டும் உயர்கிறது கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்கிறது கச்சா எண்ணெய் விலை ...
பங்கு சந்தை நிலவரம் பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 209 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2011
00:22

மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மீண்டும் சுணக்கம் கண்டது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் நன்கு இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து காணப்பட்டது.இந்நிலையில், நாட்டின் பண வீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, ரிசர்வ் வங்கி, வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது. இதுவும், பங்கு வர்த்தகத்தில் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் குறைந்திருந்தது.காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, வங்கிகளின் பங்கு விலை உயர்ந்திருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, மதியத்திற்கு பிறகு இத்துறை நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 208.82 புள்ளிகள் சரிவடைந்து, 18,149.87 புள்ளிகளில் நிறைவடைந்தது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,354.27 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,104.02 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 64.50 புள்ளிகள் குறைந்து, 5,446.65 புள்ளிகள் நிலை கொண்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)