பதிவு செய்த நாள்
18 மார்2011
09:54
மும்பை : நேற்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்ட இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று 110 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி உள்ளது. நிதித்துறை நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளதால் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 109.74 புள்ளிகள் உயர்ந்து 18,259.61 ஆகவும், நிஃப்டி 36.40 புள்ளிகள் அதிகரித்து 5,483.05 புள்ளிகளாகவும் உள்ளது. குறுகிய கால விற்பனை தொகையை 25 புள்ளிகளின் அடிப்படையில் உயர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்ததை தொடர்ந்து பங்குச் சந்தையில் இன்று ஏற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள் 0.19 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 0.50 சதவீதமும் உயர்வுடன் காணப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|