பதிவு செய்த நாள்
19 மார்2011
09:41
கோல்கத்தா : கோடை காலம் துவங்கி உள்ளதை அடுத்து மக்கள் அதிகளவில் நாடும் குளிரூட்டும் சாதனங்களின் விலையை முன்னணி நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. எல்.ஜி., மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஏசி மற்றும் ஃப்ரிட்ஜின் விலைகளை 10 சதவீதம் உயர்த்தியை அடுத்து அமுல் மற்றும் வாடிலால் போன்ற பால் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ஐஸ்கிரீமின் விலையை 12 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதே போன்று சோப்பு தயாரிப்பிற்கான மூல பொருட்களின் விலை 60 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் சோப்புகளின் விலையை 10 சதவீதம் உயர்த்த இந்துஸ்தான் யூனிலிவர் மற்றும் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த புதிய விலை ஏற்றத்தின்படி இந்த ஆண்டு துவக்கம் முதல் ஃப்ரிட்ஜின் விலை ரூ.500 லிருந்து ரூ.1500 வரையும், ஏசி விலை ரூ.2000 முதல் ரூ.3000 வரையும் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|