பதிவு செய்த நாள்
19 மார்2011
10:23
புதுடில்லி : மார்ச் மாதத்தின் முதல் 10 நாட்களில் ரயில்வே துறை பெற்ற வருமானம் ரூ.2,880.14 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே 10 தினங்களில் ஈட்டிய வருவாயுடன் (ரூ.2,605.05 கோடி) ஒப்பிடுகையில் இது 10.56 சதவீதம் அதிகமாகும். இந்த 10 நாட்களில், சரக்கு போக்குவரத்து மூலமாக பெறப்பட்ட வருமானம் 16.31 சதவீதம் அதிகரித்து ரூ.1,953.38 கோடியாக உள்ளது. இது, மொத்த வருமானத்தில் 75 சதவீதமாகும். நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியால், சரக்கு போக்குவரத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டு வருகிறது. பயணிகள் கட்டணம் மூலம் ரூ.818.46 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது தவிர பிற வருமானங்கள் 9.56 சதவீதம் உயர்ந்து ரூ.62.80 கோடியிலிருந்து ரூ.68.80 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த கால அளவில் ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 24.19 கோடியிலிருந்து 24.17 கோடியாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|