பதிவு செய்த நாள்
19 மார்2011
14:31
புதுடில்லி : டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டைட்டன், ஜூலை மாதத்தில் இந்தோனேஷியாவில் தனது புதிய கிளையை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. சர்வதேச அரங்கில் தனது கிளைகளை விரிவுபடுத்தி வரும் டைட்டன் நிறுவனம், உள்நாட்டிலும் 250 புதிய கிளைகளை அடுத்த நிதியாண்டில் துவக்க திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் இந்தோனேஷியாவில் டைட்டன் வாட்ச் விற்பனை துவங்க உள்ளதாக அந்நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பாஸ்கர் பட் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் டைட்டன் வாட்ச்களை அறிமுகம் செய்வதற்காக மட்டுமே கிளைகளை துவக்கி வருவதாகவும், ஃபாஸ்ட்டிராக், தனிஷ்க் ஜூவல்லரி ஆகியவற்றை பிரபல படுத்துவதற்காக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது 31 நாடுகளில் டைட்டன் நிறுவன கிளைகள் இயங்கி வருகின்றன. அடுத்த ஆண்டில் 200 முதல் 250 கிளைகளை வெளிநாடுகளில் திறக்க உள்ளதாகவும், அவற்றுடன் 100 டைட்டன் ஐ கிளைகளை துவக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|