நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3,473 கோடி சரிவுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3,473 கோடி சரிவு ... பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ரூ.6,000 கோடிக்கு 2வது பங்கு வெளியீடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ரூ.6,000 கோடிக்கு 2வது பங்கு வெளியீடு ...
உள்நாடு மற்றும் சர்வதேச நடப்புகளால் பங்கு வர்த்தகம் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
01:02

உள்நாடு மற்றும் சர்வதேச நிலவரங்களால், நாட்டின் பங்கு வர்த்தகம், பாதிப்புக்குள்ளானது. ரிசர்வ் வங்கியின், வங்கிகளுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிருஷ்ணா - கோதாவரி படுகையில் எரிவாயு உற்பத்தி குறையக்கூடும் என்ற செய்தி, போன்றவற்றால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.சென்ற வாரம், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், பல நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, சென்றாண்டின் இதே காலாண்டை விட அதிகரித்திருந்தது என்றாலும், அது, 'கடலில் கரைத்த பெருங்காயம்' போல, பங்கு வர்த்தகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.வெள்ளிக்கிழமையன்று, மும்பை பங்குச் சந்தை 271 புள்ளிகள் சரிவடைந்து,17,878 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 73 புள்ளிகள் குறைந்து, 5,373 புள்ளிகளிலும் நிலைகொண்டன. சென்ற வாரத்தில் மட்டும், 'சென்செக்ஸ்' 295 புள்ளிகளையும், 'நிப்டி' 72 புள்ளிகளையும் இழந்தன.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: இந்நிறுவனத்தின் எரிவாயு உற்பத்தி, 13 சதவீதம் குறையலாம் என்ற öŒ#தியை அடுத்து, வெள்ளிக்கிழமையன்று, அந்நிறுவனப் பங்கின் விலை, 3.7 சதவீதம் குறைந்தது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், இந்நிறுவனத்தின் பங்களிப்பு மிகவும் அதிகமாகும். இதன் பங்கின் விலை சரிவடைந்ததையடுத்து,'சென்செக்ஸ்' அதிகளவு பாதிப்புக்குள்ளானது.ரிசர்வ் வங்கியும், பணவீக்கமும்: உணவுப்பொருள்களின் விலை, சிறிது குறைந்துள்ள நிலையில், நாட்டின் பொது பணவீக்கம் குறையவில்லை. இதற்கு, கச்Œõ எண்ணெ# விலை உயர்வு, முக்கிய காரணம். பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதங்களை உயர்த்துவது தவிர வேறுவழியில்லை.சென்ற வியாழக்கிழமையன்று, ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்களை முறையே 0.25 சதவீதம் உயர்த்தியது. இதைதொடர்ந்து, வங்கிகளும், கடன்கள் மற்றும் டிபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கும். வட்டி விகித உயர்வு ஆபத்தானது. இதனால், அடுத்த காலாண்டில், நிறுவனங்களின் லாபவரம்பு குறைவதுடன், பங்கு வர்த்தகமும் பாதிப்புக்குள்ளாகும்.புதிய வெளியீடுகள்: பவர் டிரேடிங் கார்ப்பரேஷனின் ஓர் அங்கமான, பி.டி.சி. இந்தியா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய வெளியீடு, 16ம் தேதி தொடங்கி, 18ம் தேதியுடன் நிடைவடைந்தது. அண்மையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, லவ்வபில் லிங்கரீஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு அதிகளவில் ஆதரவு கிடைத்ததால், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கும் முதலீட்டாளர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், பி.டி.சி. இந்தியா பைசான்சியல் நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, தப்பித்தோம், பிழைத்தோம் என்ற அளவில், 1.8 மடங்கிற்கே விண்ணப்பங்கள் வந்தன. பங்கின் விலை, 26 - 28 ரூபாய்வரை என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வெளியீட்டு விலை, 26 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டால், அது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஜப்பான் நிலவரம்: அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி, உற்பத்தியை குறைத்துள்ளது. மேலும், அந்நாட்டின் ஏற்றுமதி, நின்றுபோன நிலையில், இறக்குமதி கூடியுள்ளது.இதுநாள் வரை, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த பல நாடுகள், அவற்றின் இறக்குமதி தேவைக்கு இந்தியா போன்ற நாடுகளை எதிர்பார்க்க தொடங்கியுள்ளன. இது, நம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கக் கூடும். கோல் இந்தியா: பொதுத்துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் லாபம் கூடும் என, அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம், 9,600 கோடி ரூபாய்இருக்குமென்றும், இது, அடுத்த நிதியாண்டில், 11 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் உங்கள் தொகுப்பில் இருக்கட்டும் என்று முன்பே பரிந்துரை செய்திருந்தோம். விலை குறையும் போது, நீண்டகால அடிப்படையில் இதன் பங்குகளை வாங்கி வைக்கலாம். வரும் வாரம் எப்படி:இருக்கும்? பங்கு சந்தை தொடர்ந்து, இரண்டாவது வாரமாக இறக்கத்தை சந்தித்துள்ளது. லிபியாவில் பிரச்னைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது, கச்சா எண்ணெய் விலையை குறைக்க உதவும். அதேசமயம், மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் அமைதி ஏற்பட வேண்டும். வரும் வாரமும் பங்கு வர்த்தகம், எண்ணெய் பிசுக்காகத் தான் இருக்கும்.அதிலிருந்து விடுபட வேண்டும். சென்ற ஆண்டின் காலாண்டை விட, நடப்பாண்டின் காலாண்டில் அதிகளவில் முன்கூட்டிய வரியை செலுத்தியுள்ள நிறுவனங்களின் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். - சேதுராமன்சாத்தப்பன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)