உள்நாடு மற்றும் சர்வதேச நடப்புகளால் பங்கு வர்த்தகம் பாதிப்புஉள்நாடு மற்றும் சர்வதேச நடப்புகளால் பங்கு வர்த்தகம் பாதிப்பு ... நாப்தா விலையில் சரிவு: பாலிமர் விலை குறையும் நாப்தா விலையில் சரிவு: பாலிமர் விலை குறையும் ...
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ரூ.6,000 கோடிக்கு 2வது பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
01:03

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையில், ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம், 6,000 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி, இந்நிறுவனம், சென்ற வெள்ளிக்கிழமையன்று பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி'க்கு விண்ணப்பித்துள்ளது.இந்நிறுவனத்தின் இப்பங்கு வெளியீட்டிற்கு, சென்ற மாதம், பொருளாதார விவகாரங்களுக்கான முக்கிய அமைச்சர்கள் குழு கூட்டத்தில், அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு, இந்நிறுவனம் முதல் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.அப்போது, மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டிருந்த மொத்த பங்கு மூலதனத்தில், 10 சதவீத பங்குகளை வெளியிட்டது. அதன்பிறகு, மத்திய அரசின் பங்கு மூலதனம் 89.78 சதவீதமாக குறைந்துள்ளது.இரண்டாவது பங்கு வெளியீட்டில், புதிதாக 15 சதவீத பங்குகளும், மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 5 சதவீத பங்குகளும் வெளியிடப்பட உள்ளன.வெளியிடப்படவுள்ள மொத்த, 17.21 கோடி பங்குகளில், 5.74 கோடி பங்குகள், அரசின் தரப்பிலிருந்து வெளியிடப்படவுள்ளது. ஆக, இப்பங்கு வெளியீட்டின் மூலம், மொத்தம் 6,000 கோடி ரூபாய் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனின், இந்த இரண்டாவது பங்கு வெளியீடு, வரும் 2011-12ம் நிதியாண்டின், மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பை, வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை அறிவிக்கும் போது, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.வரும் நிதியாண்டில், பொதுத்துறை பங்கு வெளியீட்டில், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடே முதலாவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)