பதிவு செய்த நாள்
20 மார்2011
15:32
டோக்கியோ: ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பின் காரணமாக கார் தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கார் உற்பத்தி மீண்டும் துவங்குவதற்கு 2 மாதங்கள் வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா, டொயோட்டோ, நிசான் மற்றும் சுசுகி தொழிற்சாலைகளில் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் மற்றும் மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் தனது கார் உற்பத்தியை மே மாதம் வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவிலுள்ள டீலர்கள் அனைவருக்கும் ஹோண்டா நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளர்களிடமிருந்து கார்களுக்கான முன்பதிவை ஹோண்டா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று, டொயோட்டோ, நிசான் மற்றும் சுசுகி போன்ற நிறுவனங்களும், கார் உற்பத்தி பணிகளை வரும் மே மாத்தில் முழு அளவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|