பங்குச் சந்தை பட்டியலில் லவ்வபிள் லிங்கரி நிறுவனம்பங்குச் சந்தை பட்டியலில் லவ்வபிள் லிங்கரி நிறுவனம் ... பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு தடை பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு தடை ...
உணவுப் பொருள் பணவீக்கம் 10.05 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2011
00:19

புதுடில்லி: நாட்டின் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம், மார்ச் 12ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 10.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 9.42 சதவீதமாக இருந்தது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், காய்கறிகள், பழங்கள், தாதுப்பொருள்கள், குறிப்பிட்ட தானியங்களின் விலை அதிகரித்திருந்தது. கடந்த மூன்று வாரங்களாக, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஒற்றை இலக்கத்தில் இருந்தது. இந்நிலையில், மார்ச் 12ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், காய்கறிகளின் விலை,சென்ற ஆண்டின் இதே வாரத்துடன் ஒப்பிடும் போது, 11.20 சதவீதம் உயர்ந்திருந்தது. உருளைக் கிழங்கின் விலை 2.82 சதவீதமும்,வெங்காயத்தின் விலை 10.80 சதவீதமும் அதிகரித்திருந்தது. இவைதவிர, பழங்கள் (23.60 சதவீதம்),முட்டை, இறைச்சி, மீன்வகைகள் (தலா 13.21 சதவீதம்),பால் (6.63 சதவீதம்) பருப்பு வகைகள் (4.45 சதவீதம்), அரிசி(2.75 சதவீதம்) மற்றும் கோதுமை (2.15 சதவீதம்)போன்றவற்றின் விலையும் உயர்ந்திருந்தது.உணவு சாராத பொருள்களின் விலை, ஆண்டு கணக்கில், 26.78 சதவீதம் உயர்ந்திருந்தது. தாதுக்கள் 12.35 சதவீதம் என்ற அளவிலும், பெட்ரோல் 23.14 சதவீதமும் அதிகரித்திருந்தது.நடப்பு 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொது பணவீக்கம், 8.31 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நாட்டின் பணவீக்கம், 8 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.ரிசர்வ் வங்கி, மார்ச் 17ம் தேதி அறிவித்த நிதிக் கொள்கையில், நடப்பு மார்ச் மாத இறுதியில், நாட்டின் பணவீக்கம் 8 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது. இது,முந்தைய மதிப்பீட்டில், 7 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, ரிசர்வ் வங்கி,சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை எட்டு முறை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)