பதிவு செய்த நாள்
25 மார்2011
00:19
புதுடில்லி: பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கான தடை, 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில், போதிய அளவிற்கு பருப்பு வகைகள் உற்பத்தி இல்லாததால், நம் நாடு வெளிநாடுகளிலிருந்து, பருப்பு வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது.இந்நிலையில், உள்நாட்டில், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு, வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, இந்த ஏற்றுமதி தடையை 2012ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது என, வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, பருப்பு வகைகள் உற்பத்தி இல்லாததால், இவற்றின் விலை உயராமல் இருக்கும் வகையில், கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஏற்றுமதிக்கு தடை விதித்தது.நடப்பாண்டில், நம் நாடு 34 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தின் பொது பணவீக்கத்தில், பருப்பு வகைகளுக்கான குறியீடு 1.89 சதவீதமாக குறைந்திருந்தது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் 12.72 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாலும், காபுலி வகை கொண்டைக் கடலை மற்றும் இயற்கை உரம் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பருப்பு வகைகள் (10 ஆயிரம் டன் வரை) ஏற்றுமதிக்கு அனுமதி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|