உணவுப் பொருள் பணவீக்கம் 10.05 சதவீதமாக உயர்வுஉணவுப் பொருள் பணவீக்கம் 10.05 சதவீதமாக உயர்வு ... ஐ.டி.பி.ஐ., பேங்க்: மும்பையில் புதிய கிளை ஐ.டி.பி.ஐ., பேங்க்: மும்பையில் புதிய கிளை ...
பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2011
00:19

புதுடில்லி: பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கான தடை, 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில், போதிய அளவிற்கு பருப்பு வகைகள் உற்பத்தி இல்லாததால், நம் நாடு வெளிநாடுகளிலிருந்து, பருப்பு வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது.இந்நிலையில், உள்நாட்டில், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு, வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, இந்த ஏற்றுமதி தடையை 2012ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது என, வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, பருப்பு வகைகள் உற்பத்தி இல்லாததால், இவற்றின் விலை உயராமல் இருக்கும் வகையில், கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஏற்றுமதிக்கு தடை விதித்தது.நடப்பாண்டில், நம் நாடு 34 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தின் பொது பணவீக்கத்தில், பருப்பு வகைகளுக்கான குறியீடு 1.89 சதவீதமாக குறைந்திருந்தது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் 12.72 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாலும், காபுலி வகை கொண்டைக் கடலை மற்றும் இயற்கை உரம் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பருப்பு வகைகள் (10 ஆயிரம் டன் வரை) ஏற்றுமதிக்கு அனுமதி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)