பதிவு செய்த நாள்
25 மார்2011
00:21
மும்பை: ஐ.டி.பி.ஐ., பேங்க், மும்பையில் பாந்திரா குர்லா வளாகத்தில், புதிய கிளை ஒன்றை தொடங்கியுள்ளது. இக்கிளையை ஐ.டி.பி.ஐ., வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.மல்லா முன்னிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'யின் தலைவர் யு.கே.சின்ஹா துவக்கி வைத்தார். இப்புதிய கிளையும் சேர்த்து, இவ்வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 806 ஆக உயர்ந்துள்ளது. ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு, வங்கி சேவையுடன் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் வழங்கி வருகிறது.இவ்வங்கிக்கு நாடு முழுவதுமாக 806 கிளைகளும், 1,357 ஏ.டி.எம். மையங்களும் உள்ளன. 2010ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி வரையிலுமாக, வங்கியின் மொத்த வணிகம், 2 லட்சத்து 21 ஆயிரத்து 98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்த ஓன்பது மாத காலத்தில், வங்கி, 1,134 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது என, இவ்வங்கியின் தலைவர் மல்லா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|