பதிவு செய்த நாள்
25 மார்2011
00:25
- திருமை. பா. ஸ்ரீதரன் - நம்நாட்டின் விளைபொருள் முன்பேர வர்த்தகம், தற்போது சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் வாயிலாக, விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. இந்திய அளவிலும், உலகளவிலும் முன்பேர வர்த்தகத்தில் இணைக்கப்பட்டு, வர்த்தகம் செய்யப்படும் பொருள்களுக்குள்ள தேவைப்பாடு, அளிப்பு, விலை உள்ளிட்ட விவரங்கள் வெளிப்படையாக உள்ளன. இது, நாடு தழுவிய அளவில், ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு, அமைப்பு சார்ந்த சந்தையாக உள்ளதால், கொள்முதல், விற்பனை ஆகியவை வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, தேசிய அளவில் 5 முன்பேர வர்த்தக சந்தைகளும், மண்டல அளவில் 19 முன்பேர சந்தைகளுமாக, மொத்தம் 24 நிறுவனங்கள், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. நடப்பு சந்தைக்கும் (ஸ்பாட் மார்க்கெட்), முன்பேர வர்த்தக சந்தைக்கும் (பியூச்சர்ஸ் மார்க்கெட்) வேறுபாடு உள்ளது. அதாவது, நடப்பு சந்தையில் விவசாயிகள், நேரடியாக கொண்டுவரும் விளைபொருள்கள் மீது, வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. வர்த்தகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்கு, விளை பொருள்களை வியாபாரிகளிடம் அளித்து விட்டு, அதற்கான தொகையை விவசாயிகள் பெற்றுக் கொள்கின்றனர். அதேசமயம், முன்பேர வர்த்தக சந்தையில், பொருள்கள் கைவசம் இல்லாமலேயே அதை வாங்கலாம், அல்லது விற்கலாம். அதாவது, குறிப்பிட்ட பொருளை, குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட விலைக்கு, குறிப்பிட்ட மாதத்தில் வாங்கிக் கொள்ளும் அல்லது விற்பனை செய்யும் வகையில், இங்கு முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.முன்பேர வர்த்தகத்தில், விளைபொருள்களின் மீது வர்த்தகம் மேற்கொள்ளும்போது, எந்த அளவிற்கு அப்பொருள்கள் கையிருப்பில் உள்ளன என்பது குறித்து தெளிவாக இல்லாததால், அவற்றின் விலை செயற்கையாக ஏற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், அப்பொருள்களின் விலை மிகவும் உயர்ந்து விடுகிறது. எனவே, அத்தியாவசிய பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு, பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இதற்கு தடை விதிக்கும்படியும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.இந்நிலையில், நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளதால், அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைப்பு வசதிகள் உள்ளன. இவை அனைத்தும் கம்ப்யூட்டர் வழியாக மேற்கொள்ளப்படுவதால், இதை, ஆன்-லைன் வர்த்தகம் என்று அழைக்கின்றனர். தற்போது, நாட்டில் பங்கு வியாபாரம், கம்ப்யூட்டர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, இமயம் முதல் குமரி வரை, ஆன்-லைன் வாயிலாக எவ்வாறு வர்த்தகம் நடைபெறுகிறதோ அதே போன்று தான், இந்த முன்பேர வர்த்தகமும் மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக, முன்பேர வர்த்தகம் என்பது, அளிப்பு (குதணீணீடூதூ) ) மற்றும் தேவையை (ஈஞுட்ச்ணஞீ) பொறுத்தே உள்ளது. குறிப்பாக, வாங்குவோர், விற்போரிடையே ஒரு பொருளின் விலை, அளவு, டெலிவரி எடுத்துக் கொள்ளும் காலம் போன்றவை முன்கூட்டியே ஒப்பந்தமாக மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|