முன்பேர வர்த்தகமும், ஒருங்கிணைப்பு வசதியும்முன்பேர வர்த்தகமும், ஒருங்கிணைப்பு வசதியும் ... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தேவை அதிகரிப்பால் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 41 சதவீதம் வளர்ச்சி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தேவை அதிகரிப்பால் நவரத்தினங்கள் மற்றும் ... ...
வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2011
00:25

புதுடில்லி: நாட்டில், 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), தொலைத்தொடர்பு துறையில், அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக, ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இதற்கான பணிகள் 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் துவங்கும் என, மத்திய தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.ஒவ்வொரு மாதமும், மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. சராசரியாக, மாதத்திற்கு 1.50 கோடி புதிய வாடிக்கையாளர்கள் மொபைல் போன் சேவையில் இணைந்து வருகின்றனர்.பொதுத் துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய இரு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு மற்றும் அதை சார்ந்த உள்கட்டமைப்பு பணிகளுக்காக, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதே காலத்தில், தனியார் நிறுவனங்கள் மேற்கண்ட பணிகளை விரிவுபடுத்துவதற்காக 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.நாட்டில் தற்போது, 78 கோடி வாடிக்கையாளர்கள் மொபைல் போன் பயன்பாட்டில் உள்ளனர். இது, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 120 கோடியாக அதிகரிக்கும்.அடிப்படை தொலைத்தொடர்பு பணிகளை விரிவுபடுத்துவதன் மூலம், 3ஜி/4ஜி அலைவரிசையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும். அதாவது, 30 கோடியாக உயரக் கூடும். 2ஜி, 3ஜி/4ஜி மற்றும் விமேக்ஸ் அலைவரிசை சேவைக்கான புதிய திட்டங்களுக்காக, 2.85 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும், நிறுவனங்களின் சார்பில், 2 லட்சம் மொபைல்போன் டவர்கள் அமைப்பதற்காக, 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும் பிராட்பேண்ட் வசதிக்காக, 75 ஆயிரம் கோடி ரூபாயும், ஒலிபரப்பு அலைவரிசைகளின் அளவை அதிகரிப்பதற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)