பதிவு செய்த நாள்
25 மார்2011
00:25
புதுடில்லி: நாட்டில், 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), தொலைத்தொடர்பு துறையில், அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக, ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இதற்கான பணிகள் 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் துவங்கும் என, மத்திய தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.ஒவ்வொரு மாதமும், மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. சராசரியாக, மாதத்திற்கு 1.50 கோடி புதிய வாடிக்கையாளர்கள் மொபைல் போன் சேவையில் இணைந்து வருகின்றனர்.பொதுத் துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய இரு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு மற்றும் அதை சார்ந்த உள்கட்டமைப்பு பணிகளுக்காக, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதே காலத்தில், தனியார் நிறுவனங்கள் மேற்கண்ட பணிகளை விரிவுபடுத்துவதற்காக 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.நாட்டில் தற்போது, 78 கோடி வாடிக்கையாளர்கள் மொபைல் போன் பயன்பாட்டில் உள்ளனர். இது, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 120 கோடியாக அதிகரிக்கும்.அடிப்படை தொலைத்தொடர்பு பணிகளை விரிவுபடுத்துவதன் மூலம், 3ஜி/4ஜி அலைவரிசையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும். அதாவது, 30 கோடியாக உயரக் கூடும். 2ஜி, 3ஜி/4ஜி மற்றும் விமேக்ஸ் அலைவரிசை சேவைக்கான புதிய திட்டங்களுக்காக, 2.85 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும், நிறுவனங்களின் சார்பில், 2 லட்சம் மொபைல்போன் டவர்கள் அமைப்பதற்காக, 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும் பிராட்பேண்ட் வசதிக்காக, 75 ஆயிரம் கோடி ரூபாயும், ஒலிபரப்பு அலைவரிசைகளின் அளவை அதிகரிப்பதற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|