பதிவு செய்த நாள்
25 மார்2011
10:44
புதுடில்லி : கோடைகாலத்தை குதூகலமாக கொண்டாட வசதியை ஏற்படுத்தித் தரும் பொருட்டு, மேக் மைடிரிப் நிறுவனம், பூடான் அரசுடன் இணைந்து கோடைகால விடுமுறை பேக்கேஜ்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மேக் மைடிரிப் நிறுவன தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி மொகித் குப்தா கூறியதாவது, இந்தாண்டின் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள இந்த விடுமுறை பேக்கேஜ்களுக்காக, சார்டர்ட் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. டில்லி மற்றும் மும்பை நகரங்களிலிருந்து இயக்கப்படும் இந்த சேவைக்கு நபர் ஒன்றுக்கு ரூ.33,999 மற்றும் ரூ.39,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பெற, நாடுமுழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி2பி ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பேக்கேஜில் பயணிப்போர்கள், திம்பு, பாரோ உள்ளிட்ட இடங்களை காணவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜ்களுக்காக, மேக் மைடிரிப் நிறுவனம், பூடானின் பொதுத்துறை விமான நிறுவனமான துருகைர் ஏர்லைன்ஸ் மற்றும் முன்னணி நட்சத்திர ஹோட்டல்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவி்த்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|