பதிவு செய்த நாள்
25 மார்2011
13:47
ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்த மைண்ட்டிரீ திட்டம்பெங்களூரு : இந்தியாவின் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைண்ட்டிரீ நிறுவனம், 2011-12ம் ஆண்டில், ஊழியர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த மைண்ட்டிரீ நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிருஷ்ணகுமார் நடராஜன் கூறியதாவது, இந்தியாவில், தங்கள் நிறுவனம் முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. இந்நிலையில், சேவையை அதிகரிக்கும் பொருட்டு, ஊழியர்களின் எண்ணிக்கையை இருமடங்கு அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, இந்த ஆண்டில் மட்டும் 2,400 கேம்பஸ் இண்டர்வியூக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்காரணமாக, ஊழியர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய அளவில், தங்கள் நிறுவனத்தில் 9,700 பேர் பணியாற்றி வருவதாகவும், இந்தாண்டில் மட்டும் 1,100 பேர் புதிதாக பணியமர்த்தப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|