பதிவு செய்த நாள்
26 மார்2011
13:25
ஐதராபாத் : இந்தியாவின் முன்னணி கார்கோ சேவை அளித்து வரும் நிறுவனமான கட்டி நிறுவனம், புனே மற்றும் வாடி நகரங்களிலிருந்து வங்கதேசத்திற்கு சாலை மூலமான கார்கோ சேவையை துவக்கியுள்ளது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கட்டி நிறுவன நிர்வாக இயக்குனர் மகேந்திர அகர்வால் கூறியதாவது, மும்பை மற்றும் புனே நகரங்களில் இதற்கான பதிவு நடைபெற உள்ளது. இதற்காக, எக்ஸ்பிரஸ் இண்டர்நேசனல் லிமிடெட்டுடன் தங்கள் நிறுவனம் கைகோர்த்துள்ளது.இந்த கைகோர்ப்பின் மூலம், எக்ஸ்பிரஸ் இண்டர்நேசனல் லிமிடெட் நிறுவனம், இம்போர்ட் கிளியரன்சிற்கு உதவி செய்கிறது. சார்க் நாடுகளில், தங்களுக்கு நெட்வொர்க உள்ளது. முதற்கட்டமாக, டாக்காவிற்கு இந்த சேவை துவக்கப்பட உள்ளது. விரைவில், பூடான் மற்றும் நேபாள நாடுகளுக்கு சேவையை துவக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|