பதிவு செய்த நாள்
26 மார்2011
13:47
ஐதராபாத் : சிமெண்ட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, சந்தையில் சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ. 10 அதிகரித்துள்ளது. கடந்த 20 நாட்களில், சப்தமி்ன்றி இந்த விலை உயர்வு மறைமுகமாக அதிகரித்திருப்பது பாமர மக்கள் உள்ளிட்ட அனைவரையும் பெருமளவில் பாதித்துள்ளது. தற்போதைய அளவில், சிமெண்ட் சில்லரை விற்பனை விலை,சென்னையில் ரூ. 245 முதல் 255 வரையிலும், மும்பையில் ரூ. 265 முதல் 275 வரையிலும், கோல்கட்டாவில் ரூ. 285 முதல் 295 வரையிலும் மற்றும் ஐதராபாத்தில் ரூ. 270 முதல் 275 வரையிலும் விற்கப்படுகிறது. இதுகுறித்து, சிமெண்ட் வர்த்தகர்கள் கூறியதாவது, பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு வரி குறிப்பிட்ட அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் சிமெண்ட் தயாரிக்க பயன்படும் மூலபபொருட்களின் விலையும் கணிசமாக அளவு உயர்ந்துள்ளது. இதனால் தாங்களும் இந்த விலை உயர்வு செய்துள்ளதாகவும், இது தடுக்கமுடியாத நிகழ்வு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சிமெண்ட் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2011 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் சிமெண்ட் உற்பத்தி 136.51 மில்லியன் டன்களாக இருந்ததாகவும், 135.56 மில்லியன் டன் சிமெண்ட் விற்பனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|