பதிவு செய்த நாள்
26 மார்2011
14:22
புதுடில்லி : பிசினஸ் புராசசிங் அவுட்சோர்சிங் பிரிவில் இந்தியா, முடிசூடா மன்னனாக விளங்கி வருவது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இந்த பிரிவில், தாங்களும் (பிலிப்பைன்ஸ்) இந்தியாவுடன் இணைந்து பல பிரிவுகளில் இணைந்து செயல்பட உள்ளதாக பிலிப்பைன்ஸ் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் (கேபினட்) கிரிகோரி எல். டோமிங்கோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிலிப்பைன்ஸ் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கிரிகோரி எல். டோமிங்கோ, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தங்கள் நாடு, இந்தியாவுடன் இணைந்து பல்வேறு பிரிவுகளில் செயல்பட திட்டமிட்டுள்ளோம். இதன்முதற்கட்டமாக, பிபீஓ, உணவு பதப்படுத்துதல், நிலக்கரி வெட்டியெடுத்தல் (மைனிங்) மற்றும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயல்பட உள்ளோம். இதற்காக, இந்தியாவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதாக அவர் தெரிவித்தார். 2009-10ம் நிதியாண்டில், இவ்விரு நாடுகளுக்கிடையேயான, வர்தத்கம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|