பதிவு செய்த நாள்
26 மார்2011
16:40
சென்னை: இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் ஏப்ரல் 3-ந் தேதி மதுரையில் இருந்து வட மாநில புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக, ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐஆர்சிடிசி, வரும் ஏப்ரல் 3-ந் தேதி மதுரையிலிருந்து புகழ்மிக்க வட இந்திய புனிதத்தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், பூரி, கொனார்க், புவனேஸ்வர், கோல்கட்டா, கயா, வாரணாசி, அலகாபாத் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கிறது. 11 நாட்களுக்கான இந்த சுற்றுலாவுக்கு தனிநபர் கட்டணம் ரூ.5,645 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் உறுதி செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு ரெயில் பயணச்சீட்டு, இரவு தங்கும் வசதி, சுற்றுலா ஸ்தலங்களை சுற்றிப்பார்ப்பதற்கான சிறப்பு பஸ் வசதி, சைவ உணவு ஆகிய அனைத்து செலவுகளும் அடங்கும். மேலும் ஒவ்வொரு பயணிக்கும் ரூ.1 லட்சம் பயணக்காப்பீடும் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உதவியாக ஒவ்வொரு ரயில் பெட்டியிலும், ஒரு சுற்றுலா மேனேஜர் இருப்பார். பாடல் கேட்பதற்கான ஸ்பீ்ககர் வசதியும் ரயில் பெட்டிகளில் இருக்கும். பயணிகள் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, எழும்பூர், நெல்லூர், விஜயவாடா போன்ற இடங்களில் ஏறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|