பதிவு செய்த நாள்
27 மார்2011
04:07
புதுடில்லி:உள்நாட்டில், தொடர்ந்து மூன்று மாதங்களாக, இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளது. அதே சமயம், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் எண்ணெய் நிறுவனங்களின்சுத்திகரிப்புத் திறன் அதிகரித்துள்ளது என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரியில், உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி, 391 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 7.3 சதவீதம் (422 கோடி கன மீட்டர்) குறைவாகும்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா -கோதாவரி படுகையிலிருந்து, எரிவாயு உற்பத்தி செய்து வருகிறது. சேமிப்பு கிடங்குகளில் ஏற்பட்ட பிரச்னைகளால், இதன் எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளது.நாட்டின், எரிவாயு உற்பத்தியில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான, டி6 வயல்கள், முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இங்கு, தற்போது நாள் ஒன்றுக்கு 5.20 @காடி கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.பிப்ரவரி மாதத்தில், நாட்டில், 29.86 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 12.2 சதவீதம் (26.60 லட்சம் டன்) அதிகமாகும்.நாட்டில், கடல் மற்றும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து, அதிகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.இதில், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், மேற்கொள்ளப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி 47.3 சதவீதம் அதிகரித்து, 13.37 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், ராஜஸ்தானில் செயல்பட்டு வரும், கெய்ரான் இந்தியா நிறுவனம், அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால், சென்ற பிப்ரவரியில், நாட்டில் இதன் உற்பத்தி உயர்ந்துள்ளது.பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டு ”த்திகரிப்பு நிறுவனங்கள், கச்சா எண்ணெயை சுத்திகரித்து, 1.36 கோடி டன் பெட்@ராலிய பொருள்களை உற்பத்தி செய்துள்ளன. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட 5.4 சதவீதம் (1.29 கோடி டன்) அதிகமாகும்.இதே மாதத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், கச்சா எண்ணெயை சுத்திகரித்து, 43.44 லட்சம் டன் பெட்ரோலிய பொருள்களை உற்பத்தி செய்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 3.6 சதவீதம் அதிகமாகும். இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து, 13.25 லட்சம் டன் பெட்ரோலிய பொருள்களை உற்பத்தி செய்துள்ளது.இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட 6.8 சதவீதம் அதிகமாகும்.தனியார் துறையைச் சேர்ந்த, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உற்பத்தி குறைந்துள்ளது. இந்நிறுவனம், சென்ற பிப்ரவரியில், கச்சா எண்ணெயை சுத்திகரித்து, 26.68 லட்சம் டன் பெட்ரோலிய பொருள்களை உற்பத்தி செய்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாத உற்பத்தியை விட 3.4 சதவீதம் குறைவாகும்.பிப்ரவரி மாதத்தில், பொதுத்துறை நிறுவனங்களின் 17 சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் இரண்டு சுத்திகரிப்பு ஆலைகளுமாக, 112 சதவீத உற்பத்தி திறனில் செயல்பட்டுள்ளன.இதே மாதத்தில், உள்நாட்டில் செயல்படும் சுத்திகரிப்பு நிறுவனங்கள், 1.05 கோடி டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளன. இம்மாதத்தில் பெட்ரோலிய பொருள்களின் இறக்குமதி, 12.84 லட்சம் டன்னாக இருந்தது. இவற்றின் ஏற்றுமதி, 19.70 லட்சம் டன்னாகும்.உள்நாட்டில் பெட்ரோலிய பொருள்களின் பயன்பாடு, சென்ற பிப்ரவரி மாதத்தில் 3.5 சதவீதம் அதிகரித்து, அதாவது, 1.13 கோடி டன் என்ற அளவிலிருந்து, 1.17 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருள்களின் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, இத்துறை நிறுவனங்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது என, பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|