பதிவு செய்த நாள்
27 மார்2011
13:58
டிட்ரோயிட்: கார்களின் பளபளப்புக்காக பூசப்படும் குறிப்பிட்ட வகை பெயிண்ட் தயாரிக்கும் மூலப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கார் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் பாதிப்பு எதிர்கொண்டு வருகின்றன. முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களான எல்.எல்.சி., டோயோட்டா மோட்டார், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் மோட்டார் ஆகிய நிறுவனங்கள் சிராலிக் எனப்படும் பொருளை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த சிராலிக் உற்பத்தி ஆலை உலகிலேயே ஜப்பானின் ஃபுஹிஷிமா நகரில் மட்டுமே உள்ளது. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிராலிக் உற்பத்தி ஆலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஜெர்மன் கெமிக்கல் கம்பெனியால் நடத்தப்பட்டு வரும் இந்த ஆலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் எப்போதும் மீண்டும் திறக்கப்படும் என தெரியவில்லை என அதன் தலைமை நிர்வாகி கன்கோல்ஃப் ஸ்ரிம் தெரிவித்துள்ளார். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களுக்கு பூசப்படும் 2 கருப்பு வகைகள், 3 சிகப்பு வகைகள் உள்ளிட்ட 10 வண்ணங்களை தடைசெய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|