டாட்டா நிறுவனம் 50 சர்வதேச முன்னணி நிறுவனங்களில் இடம்பெற்றது டாட்டா நிறுவனம் 50 சர்வதேச முன்னணி நிறுவனங்களில் இடம்பெற்றது ... பி.எம்.டபிள்யூ., நிறுவனம் புதிய கார் அறிமுகம் பி.எம்.டபிள்யூ., நிறுவனம் புதிய கார் அறிமுகம் ...
நிலுவை தொகை ரூ.2,400 கோடியாக அதிகரிப்பு ஏர் இந்தியாவுக்கு எரிபொருளை நிறுத்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2011
00:12

புதுடில்லி: ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், எரிபொருளுக்கான கட்டணத்தை செலுத்தாததால், எண்ணெய் நிறுவனங்கள், எரிபொருள் அளிப்பதை நிறுத்த திட்டமிட்டுள்ளன. பொதுத்துறையை சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய, இரு நிறுவனங்களுக்கு, எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருளை அளித்து வருகின்றன. இவ்வகையில், இந்த இரண்டு விமான சேவை நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை, 2,400 கோடி ரூபாயை எட்டியுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ# விலை உயர்ந்து வருவதால், இவ்விரு நிறுவனங்களின் எரிபொருள் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விமான சேவை நிறுவனங்கள், தொடர்ந்து இழப்பை கண்டு வருவதால், எரிபொருளுக்கான தொகையை செலுத்த முடியாத நிலையில் உள்ளன. குறிப்பாக, இந்நிறுவனங்களால், அதன் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளத்தையும் அளிக்க முடியாமல் உள்ளன. விமான துறை அமைச்சர் வயலார் ரவி, பெட்ரோலிய துறை அமைச்சர் எஸ்.ஜெ#பால் ரெட்டியிடம், இவ்விரு விமான நிறுவனங்களுக்கும், தட்டுப்பாடு இல்லாமல் எரிபொருள் வழங்கும்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எரிபொருள் அளிக்காவிடில், அதன் விமானங்கள் அனைத்தும், விமான நிலையங்களிலேயே நிறுத்தக் கூடிய நிலை ஏற்படும். கடந்த ஒரு சில மாதங்களாக, எண்ணெய் நிறுவனங்கள், இவ்விரு விமானச் @Œவை நிறுவனங்களுக்கும் கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்குவதை நிறுத்தியுள்ளன. ரொக்க அடிப்படையில் மட்டுமே எரிபொருளை வழங்க முடியும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவை, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் விமான உதிரி பாகங்களுக்கு கூட, சரியான நேரத்தில் தொகையை அளிப்பதில்லை என கூறப்படுகிறது. மேலும், விமான நிலையங்கள் ஆணையத்திற்கும், இவ்விரு நிறுவனங்களுமாக, 600 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. விமான நிலையங்கள் ஆணையமும், விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வருவதால், நிலுவை தொகையை வசூலிக்க வற்புறுத்தக் கூடாது என, வாய்மொழி ஆணை கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும், 13 ஆயிரம் கோடி ரூபா# இழப்பில் செயல்பட்டு வருகின்றன. 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடனும் இருப்பதாக தெரியவந்துள்ளது. சென்றாண்டு மத்திய அரசு, இந்த விமான சேவை நிறுவனத்திற்கு பங்கு மூலதனமாக 2,000 கோடி ரூபாய் அளித்தது. வரும் 2011-12 ம் ஆண்டிலும், இதே அளவிற்கான தொகையை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து மத்திய அரசு, பார்லிமென்டில், பொதுத்துறை விமான நிறுவனங்கள், நாளொன்றுக்கு 36 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாகவும், ஆனால், செலவினம் 57 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. ஆக, நாளொன்றுக்கு இந்நிறுவனங்களுக்கு 21 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)