பி.எம்.டபிள்யூ., நிறுவனம் புதிய கார் அறிமுகம்பி.எம்.டபிள்யூ., நிறுவனம் புதிய கார் அறிமுகம் ... அடுத்த 2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள்  மின் உற்பத்தியை உயர்த்த இலக்கு அடுத்த 2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மின் உற்பத்தியை ... ...
இந்திய விமான நிலையங்கள் ஆணையம்வரும் 2012ம் ஆண்டில் பங்குகள் வெளியிட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2011
00:13

ஐதராபாத்: இந்திய விமான நிலையங்கள் ஆணையம், வரும் 2012ம் ஆண்டில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதன சந்தையில் களம் இறங்க இருப்பதாக, இந்நிறுவனத்தின் தலைவர் வி.பி.அகர்வால் தெரிவித்தார்.ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசும்போது அகர்வால் கூறியதாவது:இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ.), நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் பராமரித்து, நிர்வகித்து வருகிறது. பல விமான நிலையங்கள், நவீனப்படுத்தப்பட்டு வருவதுடன், விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகளவில் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.இதற்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்ள நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட உள்ளது. தற்போது, ஏ.ஏ.ஐ. நிறுவனம், சென்னை, கோல்கட்டா ஆகிய, இரண்டு பெரிய விமான நிலையங்களை மேம்படுத்தி வருகிறது. இவைதவிர, சிறிய நகரங்களில் உள்ள 35 விமான நிலையங்களில், பல்வேறு கட்டமைப்பு திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் சராசரியாக, 400 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நடுத்தர நகரங்களில் உள்ள விமான நிலையங்களையும் மேம்படுத்தி தர முடிவு செய்துள்ளது.இத்திட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, இந்த விமான நிலையங்களின் பயணிகள் கையாளும் திறன், தற்போதைய நிலையை விட, 6 அல்லது 8 மடங்கு அதிகரிக்கும்.ஏ.ஏ.ஐ. நிறுவனம், அதன் சொத்து மதிப்பு 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. ஆனால், கே.பி.எம்.ஜி. நிறுவனம், ஏ.ஏ.ஐ. நிறுவனத்தின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு தான் உள்ளது என தெரிவித்துள்ளது. சொத்து மதிப்பீட்டில் அதிகளவில் வித்தியாசம் உள்ளதால், மறுமதிப்பீடு செய்யப்படவுள்ளது. இந்த மறுமதிப்பீட்டிற்கு பிறகு, புதிய பங்கு வெளியீட்டிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அகர்வால் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)