பதிவு செய்த நாள்
28 மார்2011
12:47
புதுடில்லி : தலைநகர் டில்லியில், முன்னணி பால் விற்பனை நிறுவனமான மில்க் டெய்ரி நிறுவனம், இன்னும் சில மாதங்களில், நிறுவன தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மதர் டெய்ரி நிறுவனம் வெளியி்ட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் மாதத்திலிருந்து நாட்டில் கோடைகாலம் துவங்குகிறது, இதன்மூலம், பாலின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இநநிலையில், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 50 பைசாவிலிருந்து ரூ. 1 ஆக அதிகரிக்க பலர் வலியுறுத்தியுள்ளனர். இதனால், தாங்கள் மிகுந்த பாதிப்படையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனை சரிசெய்யும் விதமாக, பால் மற்றும் பால்பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த விலை உயர்வு, தங்கள் வாடிக்கையாளர்களை பாதிக்கும் என்ற போதிலும், தாங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதே நிதர்சனமான உண்மை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . 2009-10ம் ஆண்டிலிருந்து 2010-11ம் ஆண்டுகளில் பால் கொள்முதல் 13 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்து
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|