பதிவு செய்த நாள்
28 மார்2011
15:05
ஐதராபாத் : இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பங்கு வெளியீட்டில் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இது, நிறுவன பாணிக்கு மாறுவதை ஆணையத்தின் தலைவர் வி.பி.அகர்வால் வரவேற்றுள்ளார். விமான நிலையங்கள் ஆணையம் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல முக்கிய நகரங்களில் விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது. புதிய விமான நிலையங்கள் உருவாக்குவது மற்றும் பழைய விமான நிலையங்களை நவீனமயமாக்குவது போன்ற விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இவ்வாணையத்தின் கீழ் உள்ள 120 விமான நிலையங்களுள் 85 விமான நிலையங்கள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. 35 விமான நிலையங்களை ஆணையம் மேம்படுத்தி வருகிறது. அடுத்த ஓராண்டில் இரண்டாம் நிலை நகரங்களில் 13 விமான நிலையங்களை உருவாக்குவதற்காக கடன் வாயிலாக ரூ.1,000 கோடி நிதி திரட்ட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|