பதிவு செய்த நாள்
28 மார்2011
15:58
மும்பை : வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய வர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 127.50 புள்ளிகள் உயர்ந்து 18943.14 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 33 புள்ளிகள் அதிகரித்து 5687.25 என்ற அளவிலும் முடிவடைந்தது. பைனான்சியல், இன்ப்ராஸ்ட்ரெக்சர், வாகன நிறுவனங்கள் மற்றும் எப்எம்சிஜி நிறுவனங்களின் பங்குமதிப்புகள் சென்செக்ஸ் 19 ஆயிரம் வரையிலும், நிப்டி 5700 புள்ளிகள் வரையிலும் உயர வழிவகை செய்தது என்று கூறினால் அது மிகையல்ல. மதியம் 02.53 மணிவாக்கில் சென்செக்ஸ் 165 புள்ளிகள் அதிகரித்து 18,980 என்ற அளவிலும், நிப்டி, 43 புள்ளிகள் உயர்ந்து 5,697 என்ற அளவிலும் இருந்தது. லார்சன் அண்ட் டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் 2 முதல் 3.5 சதவீதம் ஏற்றம் கண்டன. முன்னணி நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏற்றம் பெற்றிருந்தபோதிலும், சன் பார்மா, இன்போசிஸ், ஸ்டெர்லைட், டிஎல்எப், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ரான்பாக்சி, ரிலையன்ஸ் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விற்றமயமாகவே இருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|