பங்கு வெளியிட்டில் களமிறங்குகிறது இந்திய விமான நிலைய ஆணையம்பங்கு வெளியிட்டில் களமிறங்குகிறது இந்திய விமான நிலைய ஆணையம் ... பெட்ரோல்,டீசல் விலை உயராது:ஜெயபால் ரெட்டி பெட்ரோல்,டீசல் விலை உயராது:ஜெயபால் ரெட்டி ...
ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2011
15:58

மும்பை : வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய வர்‌த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 127.50 புள்ளிகள் உயர்ந்து 18943.14 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 33 புள்ளிகள் அதிகரித்து 5687.25 என்ற அளவிலும் முடிவடைந்தது. பைனான்சியல், இன்ப்ராஸ்ட்ரெக்சர், வாகன நிறுவனங்கள் மற்றும் எப்எம்சிஜி நிறுவனங்களின் பங்குமதிப்புகள் சென்செக்ஸ் 19 ஆயிரம் வரையிலும், நிப்டி 5700 புள்ளிகள் வரையிலும் உயர வழிவகை செய்தது என்று கூறினால் அது மிகையல்ல. மதியம் 02.53 மணிவாக்கில் சென்செக்ஸ் 165 புள்ளிகள் அதிகரித்து 18,980 என்ற அளவிலும், நிப்டி, 43 புள்ளிகள் உயர்ந்து 5,697 என்ற அளவிலும் இருந்தது. லார்சன் அண்ட் டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்‌டெல், ரிலையன்ஸ் இன்‌ப்ராஸ்ட்ரெக்சர், இந்துஸ்‌தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் 2 முதல் 3.5 சதவீதம் ஏற்றம் கண்டன. முன்னணி நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏற்றம்‌ பெற்றிருந்தபோதிலும், சன் பார்மா, இன்போசிஸ், ஸ்டெர்லைட், டிஎல்எப், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ரான்பாக்சி, ரிலையன்ஸ் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விற்றமயமாகவே இருந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)