பதிவு செய்த நாள்
28 மார்2011
16:12
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 110 டாலர்களாக உள்ளது. இதனால் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலை, இறக்குமதி விலையை விட லிட்டருக்கு ரூ.4.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்து வருகின்றன. அதே சமயம் டீசல் விலை மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. லிட்டருக்கு ரூ.15.79 நஷ்டத்துடன் விற்பனை செய்து வருகிறது. இதனால் நாள் ஒன்றிற்கு ரூ.283 கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் டீசல் விலையை விரைவில் உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய எண்ணெய்த்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|