இந்தியாவின் 'வெற்றியை!'  கொண்டாட கார்ப்பரேட் நிறுவனங்கள் ரெடிஇந்தியாவின் 'வெற்றியை!' கொண்டாட கார்ப்பரேட் நிறுவனங்கள் ரெடி ... இந்திய வேலைவாய்ப்பு சந்தைவேலை மாறுதலால் பாதிப்பு இந்திய வேலைவாய்ப்பு சந்தைவேலை மாறுதலால் பாதிப்பு ...
ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில்அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2011
02:50

புதுடில்லி:ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில், 4,500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்தின் கீழ், இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், இதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.உள்நாட்டில் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பில், முதலிடத்தில் உள்ள ஹீரோ ஹோண்டா நிறுவனத் தின் துணை நிறுவனம், ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ். ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம், 26 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருந்தது.இந்நிலையில், இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இரு நிறுவனங்களும் பிரிந்து செயல்படுவதாக அறிவித்தன. இதையடுத்து, ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான, பி.எம்.முஞ்சால் குழுமம், ஹோண்டா நிறுவனம், ஹீரோ ஹோண்டாவில் கொண்டிருந்த 26 சதவீத பங்கு மூலதனம் அனைத்தையும் 3,841.83 கோடி ரூபாய்க்கு வாங்கி கொள்வதாக அறிவித்தது.ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில், ஹீரோ ஹோண்டா இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், சென்ற ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, 17.33 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருந்தது. தற்போது, ஹோண்டா நிறுவனத்தின் 26 சதவீத பங்கு மூலதனத்தை வாங்கியதையடுத்து, ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில், தற்போது இந்நிறுவனம் கொண்டுள்ள பங்கு மூலதனம் 43.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.ஹோண்டா மோட்டார் கம்பெனியின் 26 சதவீத பங்கு மூலதனத்தை பெறுவதற்காக, ஹீரோ ஹோண்டா நிறுவனத்திற்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இக்கடனில், குறிப்பிட்ட தொகையை திரும்ப செலுத்துவதற்காக, இந்நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டை பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது.இதையடுத்து, வெளிநாட்டை சேர்ந்த, பெயின் கேப்பிட்டல் நிறுவனத்தின், ஓர் அங்கமான பீ.சி.இந்தியா இன்வெஸ்டார்-ஐஐ மற்றும் லேத் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுமாக, ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய்க்கான, அன்னிய நேரடி முதலீட்டிற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)