பதிவு செய்த நாள்
30 மார்2011
02:50
புதுடில்லி:ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில், 4,500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்தின் கீழ், இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், இதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.உள்நாட்டில் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பில், முதலிடத்தில் உள்ள ஹீரோ ஹோண்டா நிறுவனத் தின் துணை நிறுவனம், ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ். ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம், 26 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருந்தது.இந்நிலையில், இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இரு நிறுவனங்களும் பிரிந்து செயல்படுவதாக அறிவித்தன. இதையடுத்து, ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான, பி.எம்.முஞ்சால் குழுமம், ஹோண்டா நிறுவனம், ஹீரோ ஹோண்டாவில் கொண்டிருந்த 26 சதவீத பங்கு மூலதனம் அனைத்தையும் 3,841.83 கோடி ரூபாய்க்கு வாங்கி கொள்வதாக அறிவித்தது.ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில், ஹீரோ ஹோண்டா இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், சென்ற ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, 17.33 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருந்தது. தற்போது, ஹோண்டா நிறுவனத்தின் 26 சதவீத பங்கு மூலதனத்தை வாங்கியதையடுத்து, ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில், தற்போது இந்நிறுவனம் கொண்டுள்ள பங்கு மூலதனம் 43.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.ஹோண்டா மோட்டார் கம்பெனியின் 26 சதவீத பங்கு மூலதனத்தை பெறுவதற்காக, ஹீரோ ஹோண்டா நிறுவனத்திற்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இக்கடனில், குறிப்பிட்ட தொகையை திரும்ப செலுத்துவதற்காக, இந்நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டை பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது.இதையடுத்து, வெளிநாட்டை சேர்ந்த, பெயின் கேப்பிட்டல் நிறுவனத்தின், ஓர் அங்கமான பீ.சி.இந்தியா இன்வெஸ்டார்-ஐஐ மற்றும் லேத் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுமாக, ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய்க்கான, அன்னிய நேரடி முதலீட்டிற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|