பதிவு செய்த நாள்
30 மார்2011
02:51
புதுடில்லி:இந்திய வேலைவாய்ப்பு சந்தை மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய பணியாளர்கள், ஒரு நிறுவனத்திலிருந்து மற்ற நிறுவனங்களுக்கு தாவுவது, மிகப்பெரிய இடர்பாடாக உள்ளது என, ராண்ட்சன்ட் மனிதவள ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து ராண்ட்சன்ட் நிர்வாக இயக்குனர் (சர்வதேச வாடிக்கையாளர் தீர்வு) மார்கரேட் கோல்ட்ஜிக் கூறியதாவது:இந்திய வேலைவாய்ப்பு சந்தையில், பணியாளர்கள் அதிக சம்பளத்திற்காக நிறுவனங்கள் விட்டு நிறுவனங்கள் தாவுவது அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனங்கள் பாதிப்படைகின்றன. நிறுவனங்கள் திறமையானவர்களுக்கு அதிக சம்பளம் தருவதற்கு தயாராக இருப்பதும் இதற்கு காரணம்.தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், வேலை விட்டு வேலை தாவுவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் உள்ளது. இந்தியாவில், திறமையான பணியாளர்கள் அதிகளவில் உள்ளனர். பல ஐரோப்பிய நிறுவனங்கள், இது போன்ற பணியாளர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன. இவ்வாறு கோல்ட்ஜிக் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|